அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

05 April 2016

வாகன ஆவணங்கள் தேவையில்லை மொபைல் இருந்தால் போதும்

இனி வாகனத்தை எடுக்கும்போது, லைசென்ஸ் இருக்கா, ஆர்.சி., புக் இருக்கா என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை; கையில் மொபைல் வைத்திருந்தால் போதும்; டிராபிக் போலீசிடம் சிக்க வேண்டிய அவசியமில்லை.

தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது; இங்கு, 'எம் வாலட்' எனப்படும், மொபைல், 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த, 'ஆப்'பில், வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிராபிக் போலீசிடம், மொபைல் போனில் உள்ள இந்த ஆவணங்களை காட்டலாம்.


நாட்டிலேயே முதல்முறையாக, தெலுங்கானாவில், இந்த, 'ஆப்' வசதியை, மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி.ராமாராவ், போக்குவரத்து அமைச்சர் பி.மகேந்தர் ரெட்டி, அறிமுகம் செய்தனர்.

சிறப்பம்சம்:

* ஆவணங்களை கையில் எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை

* இரண்டு வண்டிகள் இருந்தாலும், அந்த ஆவணங்களை, இந்த, 'ஆப்'பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

* முதல்முறை மட்டும் இணைய வசதி தேவை

* வாகனத்துக்கான, ஆர்.சி., புக் எனப்படும் பதிவுச் சான்றிதழ், வாகன ஓட்டுனர் உரிமம், காப்பீட்டு சான்றிதழ் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்யலாம்.

2 comments:

  1. விஜயகாந்த் எங்கே முதல்வர் ஆகி விடுவாரோ
    என அ.தி.மு.க , கலைஞர் தி.மு.க ,பாட்டாளி மக்கள்
    கட்சி , மற்றும் பி.ஜே .பி நிஜமாகவே விஜயகாந்தை நினைத்து
    பயபடுகிறார்கள் .
    அம்மாவோ சிங்கமுத்து , சி ஆர் சரஸ்வதி போன்ற நடிகர் நடிகைகளை
    நம்பி உள்ளார் . பாட்டாளி ராமதாசோ தே .தி.மு.க வை ஒரு கட்சியாக வே கருதவில்லை என சொன்னவர்
    எங்கே விஜய் காந்த் ?எங்கே விஜய காந்த்?
    என ஹை பீ பியில் உலாவுகிறார் . தமிழிசை யோ மீண்டும் கூட்டணியை மீண்டும் யோசியுங்கள்
    என தே .தி .மு.க வை வேண்டுகிறார் .
    தமிழ் மக்களே அ .தி.மு.க , கலைஞர் தி மு.க , பாட்டாளி மக்கள் கட்சி யை தவிர்த்து
    நன்றாக யோசித்து சீமான் அல்லது விஜயகாந்த் க்கு வோட்டளியுங்கள் .
    மேடை பேச்சில் மயங்கிய தமிழ்நாடு இந்த முறை தெரிந்தே தவறு செய்யாது .

    ReplyDelete
  2. விஜயகாந்த் எங்கே முதல்வர் ஆகி விடுவாரோ
    என அ.தி.மு.க , கலைஞர் தி.மு.க ,பாட்டாளி மக்கள்
    கட்சி , மற்றும் பி.ஜே .பி நிஜமாகவே விஜயகாந்தை நினைத்து
    பயபடுகிறார்கள் . தே.மு.தி.க.வை உடைக்க அனைத்து எதிராக இருக்கும் கட்சிகளும் போராடுகிறார்கள் .
    தே .தி.மு.க கட்சியில் பணத்திற்கு அடிபணியும் ஒரு சில நன்றி கேட்ட நாய்கள் இப்படி விலை போகிறார்கள் .
    அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் பணம் முக்கியம் என்றால் உங்கள் தலைவன் அவரே போயிருப்பாரே ?
    அப்போது நீங்கள் நன்றி கேட்ட நாய்கள் தானே ?
    அம்மாவோ சிங்கமுத்து , சி ஆர் சரஸ்வதி போன்ற நடிகர் நடிகைகளை
    நம்பி உள்ளார் . அம்மா முதலில் இருந்த வோட்டு வங்கி இப்போது இல்லை .ஏன் அம்மா கட்சி தொண்டர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல் .ஏ க்கள் அதிர்ப்தியில் உள்ளனர் . கலைஞர் கட்சி அமைச்சர்களும் அதிருப்தி .
    பாட்டாளி ராமதாசோ தே .தி.மு.க வை ஒரு கட்சியாக வே கருதவில்லை என சொன்னவர்
    எங்கே விஜய் காந்த் ?எங்கே விஜய காந்த்?
    என ஹை பீ பியில் உலாவுகிறார் . தமிழிசை யோ மீண்டும் கூட்டணியை மீண்டும் யோசியுங்கள்
    என தே .தி .மு.க வை வேண்டுகிறார் .
    தமிழ் மக்களே அ .தி.மு.க , கலைஞர் தி மு.க , பாட்டாளி மக்கள் கட்சி யை தவிர்த்து
    நன்றாக யோசித்து சீமான் அல்லது விஜயகாந்த் க்கு வோட்டளியுங்கள் .
    மேடை பேச்சில் மயங்கிய தமிழ்நாடு இந்த முறை தெரிந்தே தவறு செய்யாது .

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)