கடகம்!
"கடகம்"என்றால் நண்டு என அர்த்தம்!
இந்த ராசி நீர் ராசி என்பதால் மிகவும் மென்மையானவர்கள்,உணர்ச்சி வசப்படுபவர்கள்!
இவர்கள் மனிதநேயம்,இரக்க மனம் கொண்டவர்கள்.சக மனிதர்கள் கஷ்டத்தில் இருக்கும் போது கடக ராசிக்காரர்கள் உதவ ஒருபோதும் தயங்குவதில்லை.
சிக்கல்களை,பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்க்கக்கூடியவர்கள்.இவர்களிடம் எந்த பிரச்சனைக்கு சென்றாலும் நல்ல ஆலோசனை வழங்குவார்கள் ஆனால் இவர்களுக்கு பிரச்சனை வந்தால் மனம் தடுமாறுவார் ஆனால் வெளியிர் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
மனசறிந்து தவறு செய்யமாட்டார்கள் ஆனால் தன் மீது தவறு இருப்பதாக நினைத்தால் விவாதம் செய்யவோ சண்டை போடவோ மாட்டார்கள். இதை வைத்து அவர்களை குறைவாக எடை போடக்கூடாது.
கடகராசிக்காரர்களின் இரக்க மனதையும்,நல்ல குணத்தையும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என தெரிந்தால் மிக உறுதியானவர்களாக மாறிவிடுவார்கள்.
கடக ராசிக்காரர்களுடன் பேசுவது,பொழுதுபோக்குவது ஆனந்தமான விசயம் மனதில் கள்ளம் கபடம் இல்லாமல் பழகக்கூடியவர்கள் அதேபோல் மற்றவர்களையும் சந்தோசப்படுத்துவார்கள்.
கடக ராசிக்காரர்கள் இயற்கையாகவே பாதுகாக்கும் சுபாவம் கொண்டவர்கள். இதனால் சில சமயங்களில் அவர்கள் சற்று சுயநலமானவர்களாகக் கூட தோன்றலாம். அவர்கள் சுயநலம் கொண்டவர்கள் என்றாலும் மற்றவர்களின் சந்தோஷத்தை கெடுக்க மாட்டார்கள், அதே சமயம் எக்காரணம் கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்ய மாட்டார்கள்.
இவர்கள் மீது ஒரு பங்கு அன்பு காட்டினால் நூறு பங்கு திருப்பி செலுத்துவார்கள்.அன்புக்கு மட்டும் அடிபணியக்கூடியவர்கள்.
இவர்களிடம் நட்பு வைத்தால் அது நீண்டகாலம் தொடர்ந்த நட்பாக இருக்கும்.பழகியவர்களுக்காக உயிரை கூட கொடுப்பார்கள்.
மனோக்காரகன் சந்திரனை அதிபதியாக பெற்ற கடக ராசிக்காரர்கள்எனவே கடக ராசியினர் தங்கள் ராசிக்குரிய திங்கட்கிழமைகளில் சிவபெருமான் கோயிலில், சிவனுக்கு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அவர்களின் கிரக தோஷங்கள், கர்ம தோஷங்கள் போன்றவற்றை நீக்கும்.
பௌர்ணமி தினங்களில் முன்னிரவு நேரத்தில் வானில் தோன்றும் பூரண சந்திரனின் தரிசனம் செய்து வருவது உங்களின் மனதில் நேர்மறை சக்திகளை நிரம்பச் செய்யும்.
சந்திர பகவான் ஒரு மனிதனின் தாயாருக்கு காரகனாகிறார். எனவே கடக ராசியினர் தினந்தோறும் தங்களின் தாயாரை வணங்கி அவர்களின் ஆசிகளை பெற்று செல்வது உங்களுக்கு பல நன்மைகளை உண்டாக்கும்.
மாதமொருமுறை கோயில்கள் மற்றும் துறவிகள், ஏழைகள் ஆகியோர்களுக்கு அரிசி தானமளிப்பதால் உங்களுக்கு ஏற்படவிருக்கின்ற எத்தகைய துரதிர்ஷ்டங்களையும் போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
கடக ராசியினர் திங்கள் கிழமை அசைவம் தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment
நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)